உள்ளூர் செய்திகள்

பைக் மோதி முதியவர் பலி

Published On 2023-03-16 15:13 IST   |   Update On 2023-03-16 15:14:00 IST
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா ரோடு காமாட்சி அம்மன் கார்டன் அருகே மதுவிலக்கு அமலாக்க போலீஸ் நிலையம் அருகே வசிப்பவர் ஆறுமுகம் (வயது 85) முன்னாள் ராணுவ வீரர் நேற்று காலையில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது குடியாத்தம் நகரில் இருந்து குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் தேர்வு எழுத ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் ஆறுமுகம் மீது பைக் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆறுமுகத்தை குடியாத்த அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்ததில் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பலத்த காயமடைந்த மாணவர் தினேஷ் பாபு வேலூர் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு ள்ளார் இந்த விபத்து குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News