உள்ளூர் செய்திகள்

பைக்கில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

Published On 2023-02-21 15:04 IST   |   Update On 2023-02-21 15:04:00 IST
  • ஒருவர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 73). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் வள்ளிமலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

பள்ளிக்குப்பம் ரெயில்வே கேட் அருகே வந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி இறங்கியது. இதில் பைக் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை என்று லோகநாதன் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News