உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அருகே நிரம்பிய ஏரியில் மலர்கள் தூவி இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

நெல்லூர்பேட்டை, செட்டிக்குப்பம் ஏரிகள் நிரம்பியது

Published On 2022-12-13 14:54 IST   |   Update On 2022-12-13 14:54:00 IST
  • மலர்கள் தூவி, இனிப்பு கொடுத்தனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை அதிக அளவில் கால்வாய் மூலம் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தண்ணீராலும் தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பி வழிந்தது.

இதேபோல் செட்டிகுப்பம் ஓட்டேரியும் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிகிறது. ஏரி நிரம்பி வழியும் பகுதியில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் மலர்கள் தூவி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ். சாந்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நத்தம்பிரதீஷ், செட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி. மலர்வேணி, செல்விபாபு உட்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஏரி பாசன சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News