உள்ளூர் செய்திகள்

லாரி டியூப்பில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல்

Published On 2023-09-24 08:41 GMT   |   Update On 2023-09-24 08:41 GMT
  • 780 லிட்டர் தரையில் கொட்டி அழித்தனர்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்

அணைக்கட்டு:

வேலூர் மதுவிலக்கு. அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அல்லேரி மற்றும் அதனையொட்டிய மலைப்பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கூனம்பட்டி மலைப்பகுதியில் ஓடையோரம் 26 லாரி டியூப்பில் தலா 30 லிட்டர் வீதம் 780 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடி க்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர்.

போலீசார் விசாரணையில் கூனம்பட்டி மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் சாராயத்தை லாரி டியூப்பில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News