உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு பரோலில் சென்ற கைதிகள் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பினர்

Published On 2023-11-18 13:58 IST   |   Update On 2023-11-18 13:58:00 IST
  • 24 கைதிகள் சென்று இருந்தனர்
  • நன்னடத்தை அடிப்படையில் பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்

வேலூர்:

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1.500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படை யில் ஜெயிலில் பல பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பரோலில் 24 கைதிகள் சென்று இருந்தனர். பரோல் முடிந்த நிலையில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பினர்.

Tags:    

Similar News