உள்ளூர் செய்திகள்
வேலூர் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை தொடக்கம்
- 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
- வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையத்தை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு காணொளி காட்சியின் மூலமாக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-
மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் அதன் வழியாக செல்லும் வாகனங்களையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.
வேலூர் மாவட்டத்தில் 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்ற சம்பவங்களை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.