உள்ளூர் செய்திகள்

பரதராமி பகுதியில் வீட்டின் கூரைகள் சேதம் அடைந்தி ருப்பதை படத்தில் காணலாம்.

சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை

Published On 2023-04-24 07:11 GMT   |   Update On 2023-04-24 07:11 GMT
  • பல நாட்களாக வெயிலில் வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து சில்லென்று காற்று வீசியது
  • ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம், சுட்டெரித்தது.

அனல் காற்று வீசியது, வயதானவர்கள் பெண்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர மிகவும் அச்சப்பட்டனர், இதேபோல் இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசியது.

இந்நிலையில் நேற்று மாலை குடியாத்தத்தில் சுமார் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.

குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்திரா நகர் பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

அதேபோல் குடியாத்தம் சுற்றுப்புற கிராமங்களான கல்லப்பாடி, சைனகுண்டா உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் மாலை மழை பெய்தது. இதனால் பல நாட்களாக வெயிலில் வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து சில்லென்று காற்று வீசியது. பொதுமக்கள் மகிச்சியடைந்தனர்.

Tags:    

Similar News