உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அணங்காநல்லூர் டவுன் பஸ்சை தொடங்கி வைத்து அந்த பஸ்சில் பயணம் செய்த குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலு விஜயனுக்கு பெண்கள் நன்றி தெரிவித்த போது எடுத்த படம்.

குடியாத்தம்- அணங்காநல்லூர் இடையே அரசு டவுன் பஸ் இயக்கம்

Published On 2022-07-10 14:42 IST   |   Update On 2022-07-10 14:42:00 IST
  • பல ஆண்டுகளுக்குப் பின் தொடங்கப்பட்டது
  • பெண்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் கிராமத்திற்கு தினமும் குடியாத்தம் பழைய பஸ் நிலையில் இருந்து அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது வழியில் உள்ள கிராமத்துங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் குடியாத்தம் நகருக்கு வர இந்த டவுன் பஸ்சை பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

அரசு டவுன் பஸ் இயக்கம்

இந்நிலையில் கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்காக இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் குடியாத்தம் அணங்காநல்லூர் இடையே டவுன் பஸ் இயக்க வேண்டும் என அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் மூலமாக அப்பகுதி திமுக நிர்வாகிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று குடியாத்தம் அணங்காநல்லூர் இடையே டவுன் பஸ் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக வேலூர் தலைமை அலுவலக துணைப் பொது மேலாளர் வணிகம் பொன்னுப்பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளூர்ரவி, நகர மன்ற உறுப்பினர்கள் கே. வி.கோபாலகிருஷ்ணன், கவிதாபாபு, ம.மனோஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி.ரஞ்சித்குமார், சூரியகலாமனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் போக்குவரத்து கழக குடியாத்தம் கிளை மேலாளர் விநாயகம் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு கொடியசைத்து குடியாத்தம் அணங்காநல்லூர் பஸ்சை தொடங்கி வைத்தார்.

கண்ணீர் மல்க வரவேற்பு

தொடர்ந்து டவுன் பஸ்சில் அமர்ந்து அணங்காநல்லூர் கிராமம் வரை குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலு விஜயன் பயணம் செய்தார். அப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு டவுன் பஸ் கிராமப் பகுதிகளுக்குள் வந்ததை பெண்கள் கண்ணீர் மல்க வரவேற்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றியும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து அணங்காநல்லூர் மக்கள் சார்பில் டவுன் பஸ்சை ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லிமுருகன், துணைத்தலைவர் குமாரி கிருபானந்தம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டவுன் பஸ்ற்க்கு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News