உள்ளூர் செய்திகள்

ஆடுகள் விற்பனை அமோகம்

Published On 2023-08-25 15:28 IST   |   Update On 2023-08-25 15:28:00 IST
  • வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும்
  • ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனை

வேலூர்:

ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும்.

இங்கு வாரம் தோறும் சுமார் ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும். வழக்கம்போல் இன்று ஆட்டு சந்தை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் 1000-க்கும்மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது.இன்று ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு ஆடு 20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. அதன் படி இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.25 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News