உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-11-24 15:12 IST   |   Update On 2023-11-24 15:12:00 IST
  • உதவி கலெக்டர் விசாரணை
  • வீட்டிற்கு சென்று வட்டி, கடன் தொகையை கேட்டு அடிக்கடி தொந்தரவு

வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

தினேஷ்குமார், மோனிஷா ஆகிய இருவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளனர். அந்த பெண் கந்து வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரூ.15 ஆயிரத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ரூ.1,500 வட்டியாக செலுத்தி வந்துள்ளனர். கூலி வேலை செய்து வருவதால் தினேஷ்குமாரால் வட்டி கட்ட முடியாமல் மீண்டும் கடன் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்த அந்த பெண் அடிக்கடி தினேஷ்கு மார் வீட்டிற்கு சென்று வட்டி மற்றும் கடன் தொகையை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், தெருவில் நின்று ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மோனிஷா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட தினேஷ்குமார் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மோனிஷாவின் தற்கொலை குறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார்.

அப்போது கந்துவட்டி கேட்டு ஆபாசமாக பேசியதால் தற்கொலை செய்து கொண்ட தாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதியளித்தார்.

Tags:    

Similar News