ஜூனியர் ரெட்கிராஸ் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
- பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது
வேலூர்:
காட்பாடி விருதம்பட்டு மோட்டூர் பிள்ளையார் கோவில் அருகில் ஜூனியர் ரெட்கிராஸ் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
காட்பாடி ரெட் கிராஸ் அவைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். முன்னதாக அவை துணைத் தலைவர் ஆர் சீனிவாசன் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் ஆர் விஜயகுமாரி பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாண்மை குழு உறுப்பினர் எஸ் ரமேஷ் குமார் ஜெயின், ஸ்ரீதரன் ஜெயின், துளிர் பள்ளியின் தலைமை ஆசிரியை த.கனகா, சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமினை காட்பாடி டி.எஸ்.பி. பழனி மற்றும் சென்னை மாநகராட்சியின் துணை கலெக்டர் பி.சுமதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ெதாடங்கி வைத்தனர்.
முகாமில் சர்க்கரை நோய், தோல் நோய்கள், மற்றும் மூட்டு நோய்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவர் வசந்த் மில்டன் ராஜ் மற்றும் மருத்துவர் வானதி குழுவினர் இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர். அனைவருக்கும் சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.