உள்ளூர் செய்திகள்

உத்திரக்காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்.

உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2022-10-21 09:57 GMT   |   Update On 2022-10-21 09:57 GMT
  • ஒடுகத்தூர் பகுதியில் தொடர் மழை
  • விவசாயிகள் மகிழ்ச்சி

அணைக்கட்டு:

ஜவ்வாது மலைப்ப குதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் மலைப்பகுதியில் அதிக அளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தில் இருந்து உத்திரக்காவேரி ஆறு தோன்றுகின்றது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், அகரம்சேரி வழியாக பள்ளி கொண்டா பாலாற்றில் கலக்கிறது. மேல்அரசம்பட்டு மலைப்பகுதியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றன. இதனால் ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திர காவிரி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கினால் உத்திரக்காவேரி ஆறு செல்லக்கூடிய பகுதியான ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி ஆகிய பகுதிகளை சுற்றியிருக்கும் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த ஆற்றில் ஏற்ப்ப ட்டுள்ள வெள்ளப்பெ ருக்கால் அப்பகுதியை சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News