உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது

Published On 2023-07-25 15:15 IST   |   Update On 2023-07-25 15:15:00 IST
  • திருச்சியில் விவசாய கண்காட்சி நடைபெறுவதால் தேதி மாற்றம்
  • கலெக்டர் தகவல்

வேலூர்:

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறஉள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

மேலும் கடந்த மாதம் விவசாயிகளிடம் இருந்துபெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக வெள்ளிக்கிழமை தான் குறைதீர்வுகூட் டம் நடைபெறும். இந்தமாதம் வருகிற வெள்ளிக்கிழமை திருச்சியில் விவசாய கண் காட்சி நடைபெறுவதால் அங்கு விவசாயிகள் செல்ல உள்ளதால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News