உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது

Published On 2023-04-11 14:47 IST   |   Update On 2023-04-11 14:47:00 IST
  • மதிப்பெண் விவரங்கள் அரசுத்தேர்வுகள் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
  • கல்வித் துறை தகவல்

வேலுார்:

பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் இம்மாதம் 3ம் முடிவுகள், மே 5-ந் தேதி வெளியாகும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றவாறு, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, நேற்று தொடங்கியது. வேலுார் செயின்ட் மேரீஸ் மேல்நி லைப்பள்ளி, குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில், முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, உதவி தேர்வாளர்கள் இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர, அட்டவணையாளர், மதிப் பெண் சரிபார்க்கும் அலுவ தேதி வரை நடந்தது. இதன்லர் ஆகியோரும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதன்மூலம், விடைத் தாள் திருத்தும் பணியில் ஆயிரத்துக்கும் அதிகமான வ முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். அதோடு, ஒவ்வொரு நாளும் விடைத் தாள் திருத்தும் பணி முடிந்ததும், மதிப்பெண் விவரங்கள் அட்டவணைப்படுத் தப்பட்டு சரிபார்க்கப்படும்.

பின்னர், மதிப்பெண் விவரங்கள், அரசுத்தேர்வுகள் துறையின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News