மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி பைக் மீது மோதல்
- தம்பதி காயம்
- பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய டிரைவர் கைது
குடியாத்தம்:
குடியாத்தத்தம் அடுத்த குளிதிகைகிராமத்தை சேர்ந்த வர் லட்சுமணன். (வயது 42), தூய்மை பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் தனது மனைவி வெண் மதியுடன் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கி ளில் குடியாத்தம்- மாதனூர் சாலையில் உள்ளி மேம்பா லத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாதனூரில் இருந்து குடியாத்தம் நோக்கி கார் ஒன்று வேகமாக தாறு மாறாக வந்துள்ளது.
இந்த கார் ரெயில்வே மேம் பாலம் அருகே லட்சுமணன் ஓட்டி வந்த மோட்டார் சைக் கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனை கண்ட அவ்வ ழியாக சென்ற பொதுமக்கள், அவர்கள் இருவரையும் மீட்ட னர். அப்போது காரை தாறு மாறாக ஓட்டி வந்த நபர் குடி போதையில் இருந்து உள் ளார். அவர் பொதுமக்களை பட்டா கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
உடனடியாக பொதுமக்கள் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரம ணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மாதனூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மோகன்குமார் (27) என்பது தெரியவந்தது.
இவர் மீது ஆம்பூர் போலீஸ் நிலை யத்தில் கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதும், குடிபோதையில் காரை ஓட்டி வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதி, கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்து, அவர் ஓட்டி வந்த கார் மற்றும் பட்டாக் கத்தியை பறிமுதல் செய்தனர்.