உள்ளூர் செய்திகள்

காவலர் பயிற்சி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்ற காட்சி.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-06-26 08:44 GMT   |   Update On 2022-06-26 08:44 GMT
  • போதை பொருட்களால் தனி மனிதனின் சிந்தனை ஆற்றல் குறைகிறது.
  • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேலூர்:

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில் கோட்டை காந்தி சிலை முன்பாக இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெள்ளை புறாக்களை பறக்க விட்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.ஊர்வலத்தில் போலீசார், போலீஸ் பயிற்சி பள்ளி மாணவிகள், என்சிசி மாணவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மக்கான், அண்ணா சாலை வழியாகச் சென்று நேதாஜி மைதானத்தில் முடிவடைந்தது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் போதை பொருள் தடுப்பு குறித்து நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டி உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றுகளை வழங்கி பேசியதாவது:-

மது மற்றும் போதை பொருட்களால் தனி மனிதனின் சிந்தனை ஆற்றல் குறைகிறது. மேலும் அவர் அந்த போதைக்கு அடிமையாகி பொருளாதாரத்தை இழக்கிறார். இதனால் சமுதாயத்திற்கும் பாதிப்பு.மேலும் சுற்றுசூழலுக்கும் கேடு ஏற்படுகிறது.ஆகவே யாரும் போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது என்பதை விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று பேசினார்.

Tags:    

Similar News