சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
- சிறுமி மருத்துவமனையில் அனுமதி
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). லாரி டிரைவர் திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளனர்.
மகேந்திரன் கிராமத்திற்கு அருகே உள்ள 17 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அந்த பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை பெற்றோர்கள் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர்கள் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண் காந்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மகேந்திரன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.