உள்ளூர் செய்திகள்

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 தேர்வு இன்று நடந்தது.

வேலூரில் 27 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 3ஏ தேர்வு

Published On 2023-01-28 15:38 IST   |   Update On 2023-01-28 15:38:00 IST
  • 2 ஆயிரத்து 9 தேர்வர்கள் பங்கேற்றனர்
  • இன்றும், நாளையும் தேர்வு நடக்கிறது

வேலூர்:

டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் குரூப் 3 ஏ தேர்வு இன்றும், நாளையும் தேர்வு நடக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி அரசு பொறியியல் கல்லுாரி, கொண வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிர் கல்லுாரி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 27 மையங்களில் தேர்வு நடந்தது.

இன்று காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. இதில் மொத்தம் 7 ஆயி ரத்து 689 தேர்வர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த புள்ளி யியல் துணை சர்வீசஸ் தேர்வு நாளை (29ம் தேதி) நடக்கிறது. இதில், உதவி புள்ளியியல் ஆய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடக்கிறது. காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் 2ம் தாள் தேர்வு நடக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் தொரப்பாடி அரசு பொறி யியல் கல்லுாரி, அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, கொசப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசு மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, சத்து வாச்சாரி சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 9 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News