உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்

Published On 2022-09-21 14:57 IST   |   Update On 2022-09-21 14:57:00 IST
  • வருகிற 25-ந் தேதி நடக்கிறது
  • வேலூரில் நடந்த அவசர கூட்டத்தில் தீர்மானம்

வேலூர்:

வேலூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர்நரசிம்மன் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.பி.ஏழுமலை, பாண்டியன், மலர்விழி, செயற்குழு உறுப்பினர் அ.மா.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.விஜய், மற்றும் நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டு பள்ளி குழந்தைகளுக்கு தாயுள்ளத்தோடு சுவையான காலை உணவை அளித்து பசிபோக்கி கல்வியின் அவசியத்தை உணர செய்த முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர் கட்சியாக இருந்த நேரத்தில் தலைமை அறிவித்த எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள், சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் என மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்ற நிகழ்வுகளில் விருப்பு,. வெறுப்பின்றி தன்னலம் கருதாமல் உழைத்த அத்தனை நிர்வாகிகளுக்கு மாவட்ட கழகம் சார்பில் நன்றி.

25-ந் தேதி நடைபெறவுள்ள மாவட்ட கழக தேர்தலை சுமூகமாகவும், நேர்த்தியாகவும் நடத்தி முடித்திட மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் தமது ஒத்துழைப்பினை நல்கிட கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News