உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-23 15:00 IST   |   Update On 2022-07-23 15:00:00 IST
  • பா.ஜ.க சார்பில் நடந்தது
  • ஏாளமானோர் கலந்து கொண்டனர்.

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், பாபு, மகேஷ், மாவட்ட பொருளாளர் தீபக், மாவட்ட துணை தலைவர் ஜெகன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், தேசிய பொதுக்குழு பிச்சாண்டி, மாநில வணிக பிரிவு செயலாளர் இளங்கோ, சிறுபான்மை பிரிவு தலைவர் சையத் முனிவர், எஸ்.சி.அணி தலைவர் சக்கரவர்த்தி, மகளிர் அணிதலைவி செல்வி, ரேகா, கனிமொழி, சுகுணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.

Tags:    

Similar News