உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

Published On 2022-10-06 09:47 GMT   |   Update On 2022-10-06 09:47 GMT
  • தொடர் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பினர்
  • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது

வேலூர்:

அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே விடுமுறை நாட்களாகி விட்டது. இடையில் 3ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும் என்ற நிலை. இதனால், வெளி யூர்களில் பணிபுரிபவர்கள் நவராத்திரியை கொண்டா டுவற்காக, சொந்த ஊருக்கு செல்ல மூட்டைமுடிச்சு களுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப். 30ம் தேதி) ஊருக்கு வந்தனர்.

தொடர்ந்து, 5 நாட்க ளுக்கு பின்னர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு திரும்பினர். இதனால், வேலூர் புதிய பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. குறிப்பாக, சென்னை, சேலம், பெங்களூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல் லும் பஸ்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடித்தனர்.

பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால், வேலூர் புதிய பஸ் நிலைய பகுதி நேற்று இரவு வரை பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News