உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்.

கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-09-25 14:20 IST   |   Update On 2022-09-25 14:20:00 IST
  • 744 இடங்களில் நடந்தது
  • 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ேடாருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

வேலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், உயிர் இழப்பை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொது மக்கள் அதிக அளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மார்க்கெட் பகுதி என இன்று 744 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News