உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணிகக்கு சமுதாய வளைகாப்பு

Published On 2022-09-23 15:22 IST   |   Update On 2022-09-23 15:22:00 IST
  • புடவை வேஷ்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் :

குடியாத்தம் நகராட்சி பகுதியை சேர்ந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் மாவட்ட திட்ட அலுவலர் வி.கோமதி தலைமை தாங்கினார்.

நகர் மன்ற உறுப்பினர்கள் சி‌என்.பாபு, எம்.மனோஜ், என்.கோவிந்தராஜ், எம்‌.ஏகாம்பரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகர் மன்றத் துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்ந்து 150 கர்ப்பிணிகளுக்கு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் வழங்கிய புடவை வேஷ்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் குடியாத்தம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.

Tags:    

Similar News