உள்ளூர் செய்திகள்

பள்ளிகொண்டா அருகே இருதரப்பினர் மோதல்

Published On 2023-08-15 09:14 GMT   |   Update On 2023-08-15 09:14 GMT
  • 2 பேர் கைது
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் அருகே உள்ள தாங்கல் அம் மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம்.

இவரது மகன் தாமோ தரன் (வயது 39). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் ராமு (28), ராஜேஷ் (28). தாமோதரன் வீட்டு கழிவுநீர் ராமு மற்றும் ராஜேஷ் வீட்டின் முன் பகுதியில் செல்கிறது. இது குறித்து ராமு, ராஜேஷ் ஆகிய இருவரும், தாமோதரனிடம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கழிவு நீர் அதிகமாக இவர்கள் வீட்டு முன் சென்றதால் மீண்டும் இவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டு தாமோதரன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சரவணன், மற்றும் ராமு, ராஜேஷ் ஆகி யோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் 4 பேரும் காயமடைந்தனர். தாமோதரன் மற்றும் ராமு ஆகிய 2 பேரும் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து 2 தரப்பினரும் பள்ளிகொண்டா போலீ சில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப் பதிவு செய்து சரவணன் மற்றும் ராமு ஆகிய 2 பேரை கைது செய்தார்.

Tags:    

Similar News