உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி

Published On 2023-04-02 14:35 IST   |   Update On 2023-04-02 14:35:00 IST
  • சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தம் பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு அதிகாலை முதலே சர்ச்சுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிஎஸ்ஐ நல்மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டனர்.

தொடர்ந்து நல் மேய்ப்பர் ஆலய ஆயர் நோவாஜேம்ஸ் தலைமையில் சபை செயலாளர் சி.சுதாசந்தர், பொருளாளர் ஜெ.ஜோன்ஸ் ஆனந்தகுமார் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்ட குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நல் மேய்ப்பர் ஆலயத்தை வந்தடைந்தது தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் நகரின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News