உள்ளூர் செய்திகள்

விதி மீறி பட்டாசு வெடித்த 36 பேர் மீது வழக்கு

Published On 2023-11-14 13:25 IST   |   Update On 2023-11-14 13:25:00 IST
  • 2-வது நாளாக போலீசார் நடவடிக்கை
  • கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது

வேலூர்:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்தது.

மேலும், விதியை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதனை கண்காணிக்க சிறப்பு குழுவும் அமைக்க ப்பட்டது.

ஆனால் விதியை மீறி பலர் பட்டாசு வெடித்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் அணைக்க ட்டு, பேரணாம்பட்டு, காட்பாடி, வேலூர், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகள் மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று முன்தினம் மொத்தம் 53 பேர் மீது அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் நேற்று 2-வது நாளாக விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News