உள்ளூர் செய்திகள்
வாலிபரை தாக்கிய அண்ணன்- தம்பி கைது
- கடையில் இல்லாதபொருளை கேட்டதால் தகராறு
- போலீசார் கைது செய்தனர்
காட்பாடி:
கழிஞ்சூரை சேர்ந்தவர் அன்பு இவர்ரெயில்வே கேட் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு 7 மணிக்கு சேனுர் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (வயது 36), அவருடைய தம்பி சதீஷ்குமார் (34) ஆகியோர் கடைக்கு வந்தனர்.
கடையில் இல்லாதபொருளை கேட்டதால் அன்பு இல்லை என கூறினார். உடனே அவர்கள் இருவரும் தகராறு செய்ததால் அன்பு கடையை மூடினார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அன்புவை தாக்கியுள்ளனர். இது குறித்து அன்பு விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று காசிக்குட்டைக்கு செல்லும் சாலை யில் நின்று கொண்டிருந்த சாந்தகுமார், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.