உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.


வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க. முற்றுகை போராட்டம்

Published On 2022-09-13 15:33 IST   |   Update On 2022-09-13 15:33:00 IST
  • 195 பேரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்
  • தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்

வேலூர்:

வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை வேலூர் மாவட்ட பாஜக சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்‌. பொதுச்செயலாளர்கள் ஜெகன், எஸ்.எல். பாபு, மகேஷ், பொருளாளர் தீபக், துணைத் தலைவர்கள் சரவணகுமார், யுவராஜ் செயலாளர்கள் ஜெகன், சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் மாநகராட்சி சீர்கேட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். வேலூர் மாநகராட்சியில் முறைகேடு நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர்.

பா.ஜ.க. போராட்டத்தை யொட்டி மாநகராட்சி அலுவலக கேட் மூடப்பட்டது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News