உள்ளூர் செய்திகள்

விருதம்பட்டு டாஸ்மாக் கடையில் பீர் திருட்டு

Published On 2022-10-30 14:19 IST   |   Update On 2022-10-30 14:19:00 IST
  • சுவரில் துளையிட்டு துணிகரம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

காட்பாடி காங்கேயநல்லூரில் அரசு உயர் ரக மதுபான விற்பனை கடை உள்ளது. இதில் மர்ம நபர்கள் பின்பக்க சுவரில் துளையிட்டு நேற்று இரவு உள்ளே புகுந்தனர். அங்கிருந்து ரூ. 3000 மதிப்பிலான பீர் திருடி சென்று விட்டனர். இன்று காலையில் கடையை திறக்க வந்த ஊழியர்கள் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News