உள்ளூர் செய்திகள்

மனைவியின் பிறந்தநாள் கொண்டாடிய ஆட்டோ டிரைவர் விபத்தில் சாவு

Published On 2022-10-16 14:27 IST   |   Update On 2022-10-16 14:27:00 IST
  • ஆட்டோவில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் வின்சென்ட்.இவரது மகன் சாம்சன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவருக்கு சுவேதா என்ற மனைவியும் ஒரு மகன் உள்ளனர். மனைவிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் மாலை தனது குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதையடுத்து இரவு 11:30 மணியளவில் தனது பைக்கில் வேகமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த குடிநீர் சப்ளை செய்யும் ஆட்டோ மீது சாம்சன் ஓட்டிச் சென்ற பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதனால் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்சன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியின் பிறந்தநாள் கொண்டாடிய ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News