உள்ளூர் செய்திகள்

பைக்கில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் சாவு

Published On 2023-04-18 09:21 GMT   |   Update On 2023-04-18 09:21 GMT
  • 2 பேர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்தவர்கள் செம்மலை, நிஜந்தன்.

இவர்கள் 3 பேரும் நேற்று இரவு அப்துல்லா புரத்தில் இருந்து மேல்மொணவூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் ஒரே பைக்கில் வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது பைக் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தனுஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் செம்மலை, நிரஞ்சன் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Tags:    

Similar News