உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
- உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த இராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 65) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர்.
இவருக்கு கடந்த 4 வருடத்திற்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அறுவைசிகிச்சை செய்துள்ளார்.
மேலும் கடந்த 10-ந் தேதி மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவே வெங்கடேசன் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார் மேலும் இது குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.