வேலூரில் மழை நீர்வரத்து கால்வாய்களை அதிகாரிகள் ஆய்வு
- குடியிருப்புகளில் வெள்ளம் புகுவதை தடுக்க ஏற்பாடு
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
வேலூர் :
வேலூர் மாநகர பகுதியில் மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. இந்திராநகர் திடீர்நகர், சதுப்பேரி ஏரி கால்வாய் பகுதியில் உள்ள குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின.
தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் மாநகரப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவி ரப்படுத்தப்பட்டுள்ளன.
மழைநீர் தேங்கும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள இந்திராநகர், திடீர் நகர் ஏரி கால்வாய் பகுதிகளில் உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தண்ணீர் தேங்க கூடிய பகுதிகளில் உள்ள மழைநீர் வரத்து கால்வாய்களை சீரமைக்கவும் நிக்கல்சன் கால்வாயில் அடைப்புகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் மழைநீர் தேங்க கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு கால்வாய்கள் தூர்வாரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.