உள்ளூர் செய்திகள்

தட்டப்பாறை ஊராட்சி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்த போது எடுத்த படம்.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து போட்டியிட முயற்சி

Published On 2022-06-26 08:28 GMT   |   Update On 2022-06-26 08:28 GMT
  • யாரும் மனுதாக்கல் செய்யவில்லை
  • கிராம மக்கள் புகார்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்து 623 வாக்காளர்கள் உள்ளனர்.

தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவி எஸ்.டி.பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தட்டப்பாறை ஊராட்சியில் எஸ்.டி. பிரிவினர் யாரும் வசிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தட்டப்பாறை ஊராட்சிக்கு எஸ்.டி.பெண்கள் பிரிவில் ஒரே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது அந்த மனுவிலும் ஜாதி சான்று சரியானபடி இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது.அதனால் தட்டப்பாறை ஊராட்சிக்கு தேர்தல் நடைபெறவில்லை முன்னதாக அந்த ஊராட்சி பொதுமக்கள் தட்டப்பாறை ஊராட்சியில் எஸ்.டி.வகுப்பினர் யாரும் வசிக்கவில்லை அதுபோல் மனு அளித்தது தேர்தலில் போட்டியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டே தட்டப்பாறை ஊராட்சி எஸ்.டி.பெண்கள் என ஒதுக்கப்பட்டதை ரத்து செய்து பொதுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என தட்டப்பாறை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சிக்கு மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மீண்டும் எஸ்.டி.பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த எஸ்டி பெண்கள் பிரிவு நீக்க வேண்டுமென தேர்தலை ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர் ஆனால் மீண்டும் எஸ்டி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த தட்டப்பாறை ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு 20ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று சனிக்கிழமை மாலை வரை ஒருவரும் மனுதாக்கல் செய்யவில்லை.

நிலையில் தட்டப்பாறை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலரும், தட்டப்பாறை ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான எம்.கார்த்திகேயன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான எம். தமிழ்வாணனிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்து 2019 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தட்டப்பாறை ஊராட்சி கான ஊராட்சி மன்றத் தலைவர் பதவியானது பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலின்போது தட்டப்பாறை ஊராட்சி எஸ். டி. பெண்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது இதுகுறித்து கிராமத்தின் சார்பில் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தும், நீதிமன்றம் சென்றும் எங்கள் பகுதியில் எஸ்டி பிரிவினர் யாரும் இல்லை என்பதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது தற்போது மீண்டும் எஸ்டி பெண்கள் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் போலியான சான்றிதழ் கொடுத்து சிலர் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதால் எங்கள் பகுதியில் எஸ்.டி. பிரிவினர் யாரும் இல்லை என்பதாலும் தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவியை மகளிர் பொதுப்பிரிவில் ஒதுக்கித் தந்து மகளிருக்கான பிரதிநிதித்துவம் கிடைத்திட ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என மனு அளித்தனர்.

இதுகுறித்து மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News