உள்ளூர் செய்திகள்

ஓட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கிய காட்சி.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டி

Published On 2022-08-28 09:11 GMT   |   Update On 2022-08-28 09:12 GMT
  • 10, 12, 14 வயது பிரிவினருக்கு போட்டிகள் நடந்தது
  • வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் பதக்கங்களை வழங்கினர்.

வேலூர்:

காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தடகள போட்டி இன்று நடந்தது.

தடகள அறக்கட்டளை சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் 10,12, 14 வயது பிரிவினருக்கு போட்டிகள் நடந்தது.

இதில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு 60 மீட்டர் ஓட்டப்போட்டியும், 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 80 மீட்டர் ஓட்ட போட்டியும், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 100 மீட்டர் ஓட்ட போட்டி, உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

10 வயது குட்பட்டவர்களுக்கான 60 மீட்டர் ஓட்ட போட்டியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி மஹதி தங்கப்பதக்கமும், மேல் மாயிலை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஹரிணி வெள்ளி பதக்கமும் வென்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தடகள அறக்கட்டளை நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், யுவராஜ் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.

Tags:    

Similar News