உள்ளூர் செய்திகள்

ரூ.1.35 கோடியில் வார சந்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள ஒப்புதல்

Published On 2023-09-26 09:33 GMT   |   Update On 2023-09-26 09:33 GMT
  • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன
  • பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார்,

கூட்டத்தில் பேரூராட்சி கணினி ஆபரேட்டர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

இதில் பேரூராட்சி க்குட்பட்ட வார சந்தையை ரூ.1.35 கோடியில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள ஒப்பந்த தாரருக்கு பணி உத்தரவு வழங்கி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், கல்வெர்ட் அமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News