உள்ளூர் செய்திகள்
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
- வருகிற 30-ந்தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
இதற்காக இணையத ளம் வழியாக மட்டுமே விண் ணப்பங்களை பதிவு செய்ய முடியும். இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்க https://tnesevai.tn.gov.in/ மற்றும் https://tnega.tn.gov.in/. என்ற இணையதளங்களை பயன்ப டுத்தி கொள்ளலாம்.
விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். கிராமப்பு றங்களுக்கு ரூ.3 ஆயிரம், நகர்ப் புறத்துக்கு ரூ.6 ஆயிரம் விண் ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமார வேல்பாண்டியன் தெரிவித் துள்ளார்.