மருத்துவமனையில் நோயாளிகளிடம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்த காட்சி.
காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு கூடுதலாக தனிவார்டு அமைக்க வேண்டும்
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- குடியாத்தம் அரசு மருத்துவமனையில் போதிய இடம் இல்லை என்று புகார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, மாதனூர், ஒடுகத்தூர், பரதராமி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் என தினமும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக கூடுதலாக தனி வார்டு அமைக்க வேண்டும் எனவும், புற நோயாளிகள் பிரிவுக்கு கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என அமலுவிஜயன் எம்.எல்.ஏ. விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலையில் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோ ருடன் திடீரென குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ. சென்றார்.
அப்போது ஒவ்வொரு வார்டாகச் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மருத்துவ அலுவலர் மாறன்பாபு காய்ச்சலுக்காக மருத்து வமனையில் எடுக்கப்ப ட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆண்கள், பெண்கள் என தனியாக 25 படுக்கைகள் கொண்ட காய்ச்சலுக்கான தனி வார்டுகள் அமைக்க ப்பட்டுள்ளதாக மருத்துவ மனை சார்பில் தெரி விக்கப்பட்டது. இருப்பினும் கூடுதலாக வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் என எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.
மேலும் புறநோயாளிகள் பிரிவில் குறைந்த பட்சம் ஐந்து டாக்டர்கள் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் பகல் 12 மணி வரை இயங்க வேண்டும் எனவும், அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக மருத்துவரை நியமிக்க வேண்டும் எனவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காய்ச்சலுக்காக வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஆய்வுக்கு வந்த நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோ ரிடம் நகராட்சி பகுதி மற்றும் கிராம பகுதிகளில் முழு தூய்மை பணியை மேற்கொண்டு கொசு மருந்து அடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் எம். மனோஜ், ஏ.தண்டபாணி, அரசு மருத்து வமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் எம்.முத்து, யு.சரவணன், ஆர்.தட்சணாமூர்த்தி, எஸ். அன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.