உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டயரில் சிக்கி ஆம்பூர் வாலிபர் பலி

Published On 2023-10-18 09:19 GMT   |   Update On 2023-10-18 09:19 GMT
  • ஒருவர் படுகாயம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

அணைக்கட்டு:

ஆம்பூரை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 24) இவரது நண்பர்களான விக்னேஷ் (23) ராம்குமார் (28) ஆகியோர். வேலூரில் இருந்து கலைச்செல்வனை ஆம்பூரில் விடுவதற்காக ஒரே பைக்கில் சென்றனர்.

வெட்டுவானம் அடுத்த சின்னகோவிந்தம்பாடி அருகே வாகனம் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் பின்பக்க சக்கரத்தில் கலைச்செல்வன் சிக்கினார்.

பின் சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கலைச்செல்வன் இறந்தார்.

தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் விக்னேஷ் மற்றும் ராம்குமார் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கலைச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பள்ளிகொண்டா போலீசார் அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Tags:    

Similar News