உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-21 10:09 GMT   |   Update On 2022-12-21 10:09 GMT
  • விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தம் நகர அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு மின் கட்டணம், பால் விலை, விலைவாசி உயர்வு, உள்ளிட்டவைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ். அமுதா, முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர அவை தலைவர் ஆர்.கே.அன்பு, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர துணை செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், நகர பொருளாளர் வி.என். தனஞ்செயன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.என்.சுந்தரேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.ஐ.அன்வர்பாஷா, நகர துணை செயலாளர் கே.அமுதா, மாவட்ட பிரதிநிதிகள் எம்.கே.சலீம், அட்சயாவினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லோகநாதன், ஒன்றிய செயலாளர் வி.ராமு, டி. சிவா, பொகளூர்பிரபாகரன், சீனிவாசன், ஆனந்தன், மாவட்ட பொருளாளர் காடை மூர்த்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரமேஷ் குமார், வழக்கறிஞர் கே.எம்.பூபதி உள்பட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News