உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்

Published On 2023-08-23 14:26 IST   |   Update On 2023-08-23 14:26:00 IST
  • பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

குடியாத்தம் நடு பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் மாணவி இன்று பள்ளிக்கு வரவில்லை.

மேலும் இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர் போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

இதனால் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News