வேப்பங்குப்பம் ஊராட்சியில் குப்பைகளை சேகரிக்க புதிய வாகனம்
- பணி சுமையை குறைக்க நடவடிக்கை
- ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உடப்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு நாள்தோறும் கிராமத்தில் குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலான்மை மையத்திற்கு எடுத்து சென்று குப்பைகளை தரம் பிரித்து அதிலிருந்து உரமாக மாற்றி வருகின்றன.
மேலும் நேற்றுவரை கைகளால் தள்ளு வண்டியினை பயன்படுத்தி குப்பைகளை எடுத்து வந்தனர்.
இன்று முதல் பணி சுமையை குறக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டார். இதையடுத்து தூய்மை பணியாளர்களின் பணியை எளிதாக்கும் வகையில் குப்பைகளை சேகரிக்கும் புதிய வாகனம் வழங்கப்பட்டது.
இதனை ஊராட்சி மன்ற தலைவர் பெற்று துப்புரவு பணியாளர்களிடம் வழங்கினார். இதனால் குப்பைகளை அதிக அளவில் எடுத்து செல்லவும், சிறமம் இல்லாமல் குறைந்த நேரத்தி எடுத்து செல்லவும், பணிசுமையை எளிதாக்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு துப்புரவு பணியாளர்கள் நன்றி தொிவித்தனர்.