உள்ளூர் செய்திகள்

பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கிய காட்சி.

வேலூர் ஓட்டேரியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது

Published On 2022-12-02 15:41 IST   |   Update On 2022-12-02 15:41:00 IST
  • போக்குவரத்து பாதிப்பு
  • பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 3- வது மண்டலத்துக்குட்பட்ட ஓட்டேரியில் இருந்து பாலமதி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவந்து தற்போது சாலை அமைப்பதற்க்கான பணிகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது.

சாலை அமைப்ப தற்க்கு முன்பாக ஜல்லிபோடப்பட்டுள்ளது.நேற்று மாலை பாலமதியில் இருந்து ஜல்லிகற்க்கல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை போடப்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கியது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பின்னர் கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டது.

பாலமதி, கொலவிமேடு, பள்ள இடையம்பட்டி, வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

மேலும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், ஒரு அரசு கலை கல்லூரி உள்ளதால் மழை காலம் தொடங்கிய நிலையில் சாலை சேறும் சகதியுமாய் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை விரைந்து அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்

ஓட்டேரியில் இருந்து பாலமதி செல்லும் சாலையில் பாதாள சக்கடை அமைக்க 2 அடி அகலத்திற்க்கு பள்ளம் தோண்டப்பட்டது. அது தற்போது மண்போட்டு மூடப்பட்டு சாலை அமைக்க ஏதுவாக ஜல்லிபோடப்பட்டு வருகிறது.

இது இறுகும் தன்மையை அடைய 15 நாட்கள் ஆகும், அதற்க்குள் இதன் மீது கனரக வாகனம் இயக்கப்பட்டதால் லாரி ஒரு புறம் இறங்கியுள்ளது.

அந்த பகுதியில் மண் இருகும் தன்மையை ஆய்வு செய்து பலவீனமான இடங்களில் மண் போடப்பட்டு வருகிறது. முறையாக மண் இருகிய பிறகு சாலை அமைக்கப்படும்.

ஒரு மாதத்திற்க்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News