உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி நரிக்குறவர் சாவு

Published On 2023-03-29 15:16 IST   |   Update On 2023-03-29 15:16:00 IST
  • மகனின் கண்முன்னே துடித்துடித்து இறந்த பரிதாபம்
  • போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்வதை சேர்ந்தவர் விஜயன் (வயது 40). இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர்.

இவர் அருகில் இருக்கும் ஊர்களுக்கு சென்று ஊசி மணிகளை விற்பனை செய்து வந்தார்.

அதே பகுதியில் எதிர் வீட்டில் வசிக்கும் தங்கராஜ் என்பவர் வீட்டில் மின்சாரம் வரவில்லை என கூறப்படுகிறது. அதனை சீர் செய்வதற்காக விஜயன் சென்றார். அப்போது அங்குள்ள கம்பியில் மின்சாரம் பாய்ந்தது தெரியமால் அதனை பிடித்தார்.

இதில் மின்சாரம் தாக்கி தன் 5 வயதுடைய மகனின் கண்முன்னே துடித்துடித்து விஜயன் பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த சிறுவன் அப்பா அப்பா என கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அவரை மீட்டு பரிசோதனை செய்து பார்த்த போது அவர் மின்சாரம் தாக்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தகவலறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விஜயனின் மனைவி ஜெயப்பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Tags:    

Similar News