உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட பொக்லைன் எந்திரங்களுக்கு கார்த்திகேயன் எம்.எல்ஏ பூஜை செய்த காட்சி. அருகில் மேயர் சுஜாதா.

புதிதாக 9 பொக்லைன் எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது

Published On 2022-11-04 15:26 IST   |   Update On 2022-11-04 15:26:00 IST
  • எம்.எல்.ஏ., மேயர் முன்னிலையில் பூஜை நடந்தது
  • வேலூர் மாநகராட்சி பகுதியில் கால்வாய் தூர்வார ஏற்பாடு

வேலூர்:

வேலூர் மாநகராட்சி யில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் உள்ள கால்வாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளை தேங்கி விடுகிறது.

குறுகிய சாலைகளிலும் செல்லும் வகையில் மாநகராட்சி சார்பில் சிறிய வகையிலான 4 பொக்லைன் எந்திரங்களும், பெரிய வகையிலான 4 எந்திரங்களும், மேலும் பெரிய வகையான மற்றொரு பொக்லைன் எந்திரங்கள் என 9 எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது.

புதியதாக வாங்கப்பட்ட எந்திரங்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறிய மற்றும் பெரிய எந்திரங்கள் என 4 மண்டலங்களுக்கும் 8 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

புதிதாக வாங்கப்பட்ட எந்திரங்களுக்கு இன்று வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் வீனஸ் நரேந்திரன், யூசுப் கான், வெங்கடேசன், கவுன்சிலர்கள் வி.எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News