வேலூர் ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 5 பேர் விடுதலை
- அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு
- சிறைத்துறை அதிகாரிகள் உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டனர்
வேலூர்:
அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிக ளின் தண்டனையை நல் லெண்ணம் மற்றும் மனி தாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய அரசு உரிய நடவ டிக்கை மேற்கொள்ளும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்கள், குறிப்பாக சிறைவாசியின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல், முறை கேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பித்தல், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரானகுற்றம், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த பொருட்களை விற் பனை செய்தல், வனம் குறித்த தொடர் குற்றங்க ளில் ஈடுபட்டவர்கள், ஒருவ ருக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனைபெற்றவர்கள், சாதி மற்றும் மதரீதியான வன்முறையில் ஈடுபட்ட வர்களுக்கு முன்விடுதலை அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
முன்விடுதலை அளி கப்படுவதை, மாநில அள வில் டிஜிபி அல்லது சிறைத் துறை தலைவர், சிறைத் துறை தலைமையிடத்து டிஐஜி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேலும் குழுவினர் மாவட்ட அளவில் மத்திய சிறையின் கண்காணிப்பா ளர் தலைமையிலான குழு, மண்டல அளவில், மண் டல சிறைத்துறை டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து பட்டியலை மாநில அளவிலான குழு வுக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூரில் 47 பேருக்கு தகுதி
அதன்படி வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனு பவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படை யில் 47 கைதிகளை விடு தலை செய்ய பரிந்துரை குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஜெயில்களில் தண்டனை அனுப வித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படை யிலான கைதிகளை நேற்று முதல் விடுதலை செய்ய லாம் என்று சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.
வேலூர் ஜெயிலில் இருந்து நேற்று இரவு முதற்கட்டமாக 5 நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களிடம் சிறைத்துறை அதி காரிகள் உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
விடுதலையான 5 பேரும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். இதில் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு மேலும், 4 பேர் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்துள்ளனர்.