உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி.

4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-09-18 14:33 IST   |   Update On 2022-09-18 14:33:00 IST
  • குடோனில் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்
  • மினி வேன் பறிமுதல்

வேலூர்:

வேலூர் அடுத்த பொய்கை மோட்டூரில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனில் ஆய்வு செய்ய சென்றனர்.போலீசார் வருவதை. கண்டதும் குடோனில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.

இதையடுத்து போலீசார் குடோனில் சோதனை செய்தபோது ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக கட்டி வைத்து கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் ரேசன் அரிசி கடத்துவதற்காக நிறுத்தி வைத்திருந்த மினி வேன் மற்றும் 4 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News