உள்ளூர் செய்திகள்

300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்

Published On 2022-09-22 09:49 GMT   |   Update On 2022-09-22 09:49 GMT
  • அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
  • குடியாத்தத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழாவிற்கான ஊராட்சி களில் ஊட்டச்சத்தை தூண்டுதல் மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ராஜாகோவில் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் வேலூர் மாவட்ட திட்ட அலுவலர் வி.கோமதி தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரிபிரேம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் விமலகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இதில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் தனது சொந்த செலவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வேட்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை அனுப்பி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அந்த சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கே.ரமேஷ், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் எம். சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட குடியாத்தம் வட்டார அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.

Tags:    

Similar News