நிலத்தகராறில் பெண் உட்பட 3 பேர் கைது
- ெஜயிலில் அடைத்தனர்
- அளவு கற்கைகளை அகற்றியதால் ஆத்திரம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வினாயகம். இவரது மனைவி ஜமுனா (வயது 52)இவர்களுக்கும் மகிமைதாஸ் என்பவருக்கும் சமீப காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 15-ந் தேதி வருவாய் அலுவலர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தினை சொந்தமானவர்களுக்கு அளவீடு செய்து அளவுகல் நட்டு சென்றனர்.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார், மகிமைதாஸ், ஜெயந்தி, முரளி ஆகிய 4 பேரும் சேர்ந்து அளவு கற்கைகளை அகற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் ஜமுனாவை ஆபாசமாக திட்டியுள்ளனர்.
இதனையடுத்து ஜமுனா வேப்பங்குப்பம் போலீஸ்சில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார், மகிமைதாஸ், ஜெயந்தி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.