உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது

Published On 2023-08-11 09:36 GMT   |   Update On 2023-08-11 09:36 GMT
  • சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினர்
  • போலீசார் தீவிர விசாரணை

வேலூர்:

சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் பாலாஜி (48), வேலூர் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டாக பணி புரிகிறார். இவர், காகிதப்பட்டறையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க பைக்கில் சென்றார். தொடர்ந்து, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 3 பேர், திடீரென செல்போனை பறித்து கொண்டு ஓடினர். அதிர்ச்சி அடைந்த பாலாஜி, துரத்திச்சென்று பிடிக்க முயன்றார். ஆனால், தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய் தனர்.

அதில் செல்போன் பறித்து தப்பிய காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்த சிவா (26), சுகுமார் (23) தேவராஜ் (26) என தெரிந்தது, பின்னர் 3 பேரையும் கைதுசெய்து, செல்போனை பறிமுதல் செய் தனர். இதுபோன்று வேறு எங்கா வது கைவரிசை காட்டினரா? என அவர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News